அதிரை பிறை செய்தி எதிரொலி.. காணாமல்போன மாணவர் ஜாபிர் கிடைத்துவிட்டார்..

Editorial
0
Ads: Crescent builders
அதிரை ஷிபா மருத்துவமனை அருகே வசித்துவரும் ரஹ்மான் என்பவரது மகன் ஜாபிர் (வயது 15) காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த  08.10.2024 (திங்கள் கிழமை)  வீட்டில் டியூஷன் சென்று விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றவரை இரவு 8.00 மணியிலிருந்து காணவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இது அதிரை மட்டுமின்றி பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களால் சமூக வளைதளத்தில் பகிரப்பட்டு வந்தது. அதிரை சுற்றுவட்டாரப் பகுதிகள், சென்னை, திருச்சி, கோவை, பெங்களூரு என பிற நகரங்களுக்கும் சென்றிருக்கலாம் என்று எண்ணி அங்குள்ளவர்களிடமும் தகவல் தெரிவித்து அவர்களும் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாணவர் ஜாபிர் செந்தலைப்பட்டினதில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அதிரை அழைத்துவரப்பட்டுள்ளார். அதிரை பிறை வெளியிட்ட இப்பதிவை பகிர்ந்து மாணவர் கிடைப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவரது தாயார் நம்மிடம் தெரிவித்தார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...