அதிரை சிஸ்யாவின் முன்னெடுப்பு.. தீயணைப்புத்துறையின் பேரிடர் பயிற்சி முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள்

Editorial
0


அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு (சிஸ்யா ) சார்பில் வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான பேரிடர் கால பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

 பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், சம்சுல் இஸ்லாம் சங்க துணை தலைவர் சர்புதீன், செயலாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் உமர் பாரூக் வரவேற்புரையாற்றினார். மேலும் சிஸ்யா இளைஞர் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முகம்மது தம்பி பேரிடர் குறித்து பேசினார். 
இதனையடுத்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வீரர்கள் மாணவர்கள் மத்தியில் பேரிடர் கால பயிற்சி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். அப்போது மழை வெள்ளம் போன்ற சமயத்தில் வீட்டில் இருக்கும் வாட்டர் கேன், தண்ணீர் பாட்டில், காய்ந்த தேங்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எவ்வாறு நீந்தி கரை சேர்வது என்பது தொடர்பாகவும் விளக்கி கூறினர். மேலும் தீபாவளி பண்டிகையின்போது எவ்வாறு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும் பேசினர். இறுதியாக சமூக ஆர்வலர் முகம்மது சாலிஹ் நன்றி கூறினார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...