அதிரையின் பல நாள் கோரிக்கை நிறைவேறுது.. ரயில்நிலைய நடைமேடையை நீட்டிக்க டெண்டர் விட்டாச்சு

Editorial
0
Ads: Crescent builders
அதிரை ரயில் நிலையத்தின் நடைமேடை ரயிலின் நீளத்தைவிட குறுகியதாக இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக முதியோர் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.

பயணிகள் இறங்கும் இடத்தில் கருவேலங்காடுகள் வளர்ந்து உள்ளன. இரவு நேரத்தில் பாம்பு நட்டுவாக்கிளி தேள் போன்ற விஷப் பிராணிகளால் இரயில் பிராணிகளுக்கு ஆபத்து ஏற்படலாம். இது தொடர்பாக அதிரை பிறையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.


பட்டுக்கோட்டை நடைமேடை நீளம் 540 மீட்டர் 23 LHB கோச்சுகளும் 24ICF கோச்சுகளும் நிற்கலாம். அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி நடைமேடையின் நீளம் 420 மீட்டராகும். இவைகளை 580 அல்லது 600 மீட்டர் வரை நீட்டிக்க வேண்டும் . அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகில் வளர்ந்துள்ள கருவேலங்காடுகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. 

இந்நிலையில் அதிராம்பட்டினம், அறந்தாங்கி, பேராவூரணி ரயில் நிலையங்களில் நடைமேடையை கூடுதலாக நீட்டிக்க தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் டெண்டர் கோரியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...