அதிரையில் அதிர்ச்சி.. மீண்டும் ஈசிஆர் சாலையில் விபத்து

Editorial
0

Ads: Crescent builders

அதிரை கிழக்கு கடற்கரைசாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மக்களை தொடர்ந்து பீதியில் உறைய வைத்து வருகின்றன. கடந்த திங்கள் இரவு காதிர் முகைதீன் கல்லூரி அருகே அருகே சென்ற அதிரை நடுத்தெருவை சேர்ந்த சுஹைல் என்ற இளைஞர் மீது வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக பட்டுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

இந்த நிலையில் இன்று மதியம் அதிரை ஈசிஆர் பிஸ்மி மெடிக்கல் அருகே மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. பைக் மற்றும் டெம்போ மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பெரிதாக யாருக்கும் காயங்கள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கீழே உள்ள SUBMIT என்ற சிவப்பு வண்ண பட்டனை கிளிக் செய்யவும். உடனே உங்கள் மெயில் பக்கம் திறக்கும். அதில் SEND பட்டனை அழுத்தினால் மட்டும் போதும். உங்கள் கருத்துக்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு சென்றடைந்து விடும். 



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...