அதிரை மரியம் பள்ளித் தெருவில் அதிகரிக்கும் வெறிநாய்கள் தொல்லை

Editorial
0
Ads: Crescent builders
அதிரையில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறார்கள், பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை. 

கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை நாய் கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிரை ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட மரியம் பள்ளி தெருவில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதிரை மரைக்கா குளத்தில் ஆடு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் நாய்கள் வேட்டையாடி குதறி விட்டுச் சென்றன. அதேபோல் அப்பகுதியில் காலி மனை ஒன்றில் நாய்கள் ஆடு ஒன்றை வேட்டையாடிச் சென்று இருக்கின்றன. 

குழந்தைகள் அதிக அளவில் வீதிகளில் விளையாடும் பகுதியில் வெறி நாய்களின் தொல்லையால் பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...