அதிரையில் சாலையில் நிற்கும் பெண் பயணிகள்.. புதிய நிழற்குடையில் குறட்டைவிட்டு உறங்கும் குடிகாரர்கள்

Editorial
0

Ads: Crescent builders
அதிரை காதர் முகைதீன் கல்லூரி முக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் திறப்பு விழா கூட இன்னும் நடைபெறவில்லை. இந்நிலையில் எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் மாறி குடிமகன்களின்  கூடாரமாக அது மாறிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலை நீடித்தால் அது சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிடும். மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்திய அந்த நிழற்குடையில் இதுபான்றவர்கள் பொறுப்பின்றி படுத்து உறங்குவதால் முதியோர்கள், பெண்கள் அதில் உட்கார முடியாமல் சாலையில் நிற்கின்றனர்.
 
எனவே நிழற்குடையை விரைவில் திறந்துவைத்து அங்கு குடிகாரர்கள் நடமாடுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்குமாறும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...