அதிரையில் மின் தடை 3 மணி வரை மட்டும் தானாம்.. TANGEDCO அறிவிப்பை விட மேலும் 2 மணி நேரம் கூடுதல் தடை ஏன்?

Editorial
0
Ads: Crescent builders
110/11 KV அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மின்பாதைகளில் இன்று 20-07-2024 சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் 05.00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை ஏற்படும் என மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த மின் தடை அறிவிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மின்வாரியமான TANGEDCO வின் இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அதிரையில் மின் தடை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிரையில் எதற்காக 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து விவரம் கேட்க அதிரை மின் நிலையத்தை அலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...