
இதில் சில வடிகால்கள் மூடப்படாமலும் மூடப்பட்ட சில வழிகால்களின் மூடிகள் உடைந்தும் காணப்படுகின்றன. சில மூடிகள் கால் வைத்தால் நகரும் நிலையில் பழுதடைந்து உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி வழியாக செல்வதே பெரும் சாகசமாக இருக்கிறது என மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மக்கள் வார்டு கவுன்சிலரும் நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.