Ads: Crescent builders - Coming Soon

இந்த நிலையில் கடந்த வாரம் காதிர் முகைதீன் மகளிர் பள்ளியில் இருந்து செக்கடிமேடு செல்லும் நடுத்தெரு பிரதான சாலை, செக்கடி மேட்டில் இருந்து சேர்மன் வாடி செல்லும் சாலை, செக்கடி மேட்டில் இருந்து மரைக்கா குளம் செல்லும் புதுமனைத்தெரு பிரதான சாலை கடந்த வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
ஆனால், மறு வெள்ளிக்கிழமை வருவதற்குள் இந்த தார் சாலை கடுமையாக சேதமடைந்து இருக்கிறது. புதுமனைத்தெருவில் பழைய சாலையின் குறுக்கே பொதுமக்கள் வடிகாலுக்காக பள்ளம் தோண்டி இருந்தனர். அதனை சமன் செய்யாமல் மேலேயே புதிய சாலை அமைந்துள்ளதால் குண்டு குழியுமாக காட்சி தருகிறது. வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது.
நடுத்தெரு சாலையிலும் சேர்மன்வாடி சாலையிலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துகொண்டு வருகின்றன. சாலையின் இரு ஓரங்களிலும் முறையான கலவை இன்றி சரிந்து மண்ணோடு மண்ணாகி கிடக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் சாலை பழைய மோசமான நிலைக்கு மாறிவிடும்.
இப்படி தரமற்ற சாலையை அமைத்து தங்களின் வரிப்பணத்தை நகராட்சி வீணடிப்பதாகவும், இந்த சாலையை சீரமைக்க வேண்டும், அல்லது தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.