ஜப்பானில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
April 22, 2023
0
உலகம் எங்கிலும் பல நாடுகளில் ஏராளமான அதிரையர்கள் பணி நிமித்தமாகி தங்கி இருக்கின்றனர். அந்த வகையில் ஜப்பானில் நேற்று முந்தினம் இரவு ஷவ்வால் பிறை தென்பட்டாததால், அங்கு பணிபுரிந்து வரும் அதிரையர்கள் ரமலானை 30 நாட்களாக நிறைவு செய்து இன்று புத்தாடை அணிந்து நோன்பு பெருநாளை கொண்டாடினர். அங்கு உள்ள திடலில் நோன்பு பெருநாள் தொழுகையை ஒன்றாக நிறைவேற்றிய அவர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.