அதிரை காலியார் தெருவில் திறந்து கிடந்த கிணற்றுக்குள் மாடு தவறி விழுந்தது. தகவலறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், காலியார் தெரு இளைஞர்களுடன் இணைந்து கிணற்றில் விழுந்த மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கடும் முயற்சியின் பலனாக மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
