அதிரை மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்!

Editorial
0
நடக்கும் நிகழ்வுகள் யதார்த்தமானதாக இல்லை. ஆரம்ப நிலையை போல் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தேவையற்ற கூட்டங்களை தவிருங்கள். மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள். வெளியூர் சென்று வந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அறிகுறி இருந்தால் தயவு செய்து சோதனை செய்து கொள்ளுங்கள். 

மறைக்க நினைத்தால் நம் மூலம் குடும்பத்தாருக்கும், ஊராருக்கும் பரவும் என்பதை மறவாதீர்கள். எதிரிகள் அவதூறு சொல்வார்கள் என்று அஞ்சி மறைக்கும் காலம் மலையேறிவிட்டது. எல்லா ஊர்களிலும் கொரோனா பரவிவிட்டது. எனவே அவதூறு பரப்பும் நிலையில் அவர்களும் இல்லை. பரப்பினாலும் பொருட்படுத்த வேண்டாம். அவர்களின் அவதூறுகளுக்கு பயந்து நாம் சோதனை செய்யாமல் மறைத்து உயிர்களை பறிகொடுக்க வேண்டாம்.

கொரோனா பற்றி பரவும் வதந்திகளை, கட்டுக்கதைகளை நம்பாமல் மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இது சதி சதி என்று சொல்லி உயிர்களில் விளையாட வேண்டாம். இதுபோன்ற அறிவிலிகளின் பேச்சைக் கேட்டு அலட்சியமாக இருந்து மீட்க முடியாத உயிரை பறிகொடுத்து விட வேண்டாம். இனியாவது உண்மையை உணர்வோம். மருத்துவர்கள், படித்தவர்கள் சொல்வதை கேட்போம்.

பொதுநலன் கருதி,
அதிரை பிறை 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...